skip to Main Content

திருக்குறள்

திருக்குறள், சுருக்கமாகக் குறள், ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.[5][6] இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.

இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், “உலகப் பொதுமறை”, “பொய்யாமொழி”, “வாயுறை வாழ்த்து”, “முப்பால்”, “உத்தரவேதம்”, “தெய்வநூல்” எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்[18] கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குறைகளையும் குற்றங்களையும் மறுத்துரைத்து பண்பாட்டு முரண்களைத் திருத்திப் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றித் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

அறத்துப்பால்

  1. கடவுள் வாழ்த்து
  2. வான்சிறப்பு
  3. நீத்தார் பெருமை
  4. அறன் வலியுறுத்தல்
  5. இல்வாழ்க்கை
  6. வாழ்க்கைத் துணைநலம்
  7. மக்கட்பேறு
  8. அன்புடைமை
  9. விருந்தோம்பல்
  10. இனியவை கூறல்
  11. செய்ந்நன்றியறிதல்
  12. நடுவு நிலைமை
  13. அடக்கம் உடைமை
  14. ஒழுக்கம் உடைமை
  15. பிறனில் விழையாமை
  16. பொறையுடைமை
  17. அழுக்காறாமை
  18. வெஃகாமை
  19. புறங்கூறாமை
  20. பயனில சொல்லாமை
  21. தீவினையச்சம்
  22. ஒப்புரவறிதல்
  23. ஈ.கை
  24. புகழ் 25
  25. அருளுடைமை
  26. புலால் மறுத்தல்
  27. தவம்
  28. கூடா ஒழுக்கம்
  29. கள்ளாமை
  30. வாய்மை
  31. வெகுளாமை
  32. இன்னா செய்யாமை
  33. கொல்லாமை
  34. நிலையாமை
  35. துறவு
  36. மெய்யுணர்தல்
  37. அவா அறுத்தல்
  38. ஊழ்

பொருட்பால்

39 – இறைமாட்சி
40 – கல்வி
41 – கல்லாமை
42 – கேள்வி
43 – அறிவுடைமை
44- குற்றங்கடிதல்
45 – பெரியாரைத் துணைக்கோடல்
46 – சிற்றினம் சேராமை
47 – தெரிந்து செயல்வகை
48 – வலியறிதல் 49 – காலமறிதல்
50 – இடனறிதல்
51 – தெரிந்து தெளிதல்
52 – தெரிந்து வினையாடல்
53 – சுற்றந் தழால்
54 – பொச்சாவாமை
55 – செங்கோன்மை
56 – கொடுங்கோன்மை
57 – வெருவந்த செய்யாமை
58 – கண்ணோட்டம்
59 – ஒற்றாடல்
60 – ஊக்கம் உடைமை
61 – மடி இன்மை
62 – ஆள்வினை உடைமை
63 – இடுக்கண் அழியாமை
64 – அமைச்சு
65 – சொல்வன்மை
66- வினைத் தூய்மை
67 – வினைத்திட்பம்
68 – வினை செயல்வகை
69 – தூது
70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71- குறிப்பறிதல்
72 – அவை அறிதல்
73 – அவை அஞ்சாமை
74 – நாடு
75 – அரண்்
76- பொருள் செயல்வகை
77 – படை மாட்சி
78 – படைச் செருக்கு
79 – நட்பு
80 – நட்பாராய்தல்
81- பழைமை
82 – தீ நட்பு
83 – கூடா நட்பு
84 – பேதைமை
85 – புல்லறிவாண்மை
86- இகல்
87 – பகை மாட்சி
88 – பகைத்திறம் தெரிதல்
89 – உட்பகை
90 – பெரியாரைப் பிழையாமை
91- பெண்வழிச் சேறல்
92 – வரைவின் மகளிர்
93 – கள்ளுண்ணாமை
94 – சூது
95 – மருந்து
96- குடிமை
97 – மானம்
98 – பெருமை
99 – சான்றாண்மை
100 – பண்புடைமை
101- நன்றியில் செல்வம்
102 – நாணுடைமை
103 – குடிசெயல் வகை
104 – உழவு
105 – நல்குரவு
106- இரவு
107 – இரவச்சம்
108 – கயமை

காமத்துப்பால்

109 – தகை அணங்குறுத்தல்
110 – குறிப்பறிதல்
111- புணர்ச்சி மகிழ்தல்
112 – நலம் புனைந்து உரைத்தல்
113 – காதற் சிறப்புரைத்தல்
114 – நாணுத் துறவுரைத்தல்
115 – அலர் அறிவுறுத்தல்
116- பிரிவு ஆற்றாமை
117 – படர்மெலிந் திரங்கல்
118 – கண் விதுப்பழிதல்
119 – பசப்புறு பருவரல்
120 – தனிப்படர் மிகுதி
121- நினைந்தவர் புலம்பல்
122 – கனவுநிலை உரைத்தல்
123 – பொழுதுகண்டு இரங்கல்
124 – உறுப்புநலன் அழிதல்
125 – நெஞ்சொடு கிளத்தல்
126- நிறையழிதல்
127 – அவர்வயின் விதும்பல்
128 – குறிப்பறிவுறுத்தல்
129 – புணர்ச்சி விதும்பல்
130 – நெஞ்சொடு புலத்தல்
131- புலவி
132 – புலவி நுணுக்கம்
133 – ஊடலுவகை

Back To Top