ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம் கூடுவேம் என்ப தவா
மு.வ…
நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூவன்ன கண்ணார் அகத்து
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல்
புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது